நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Friday, July 15, 2011

பகிரங்கமாக மன்னிப்பு கேட்போம்!

நவீன ஆடைகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை குறிப்பாக செல்போன், மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை உடைமையாக்கி வைத்திருப்பதே நாகரீகம் என கற்பிக்கப்பட்டிருக்கிற இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தின் கோரமான வெளிப்பாடுதான் கோவை மாநகர போக்குவரத்து சிக்னலில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞரின் மரணம். நான் அந்த இடத்தில் இல்லை என்று காரணம் சொல்லி தப்பித்து விட முடியாது. கண்ணுக்கு எட்டுகிற தூரத்தில் கூட அல்ல, கைக்கு எட்டுகிற தூரத்தில் ஒரு சக மனிதனை கல்லால் அடித்துக் கொல்லபபடுகிற போதும் கூட எந்தவித சமூகப்பிரக்ஞையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிற கோவை மாநகரவாசிகளில் நாமும் ஒருவரா என்கிற கேள்வி இதயத்தை துளைக்கிறது. பேச்சில் கூட மரியாதை காட்டுகிற கோவை மாநகர வாசிகளின் மனிதாபிமானம் கிழிந்து தொங்குகிறது. மது குடிப்பதையும் புகை பிடிப்பதையும் "ஆண் குணமாக" மாற்றி வைத்திருக்கிற சினிமா ஊடகத்தின் வெற்றிதான் இந்த பச்சைப் படுகொலை. சக மனிதனின் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்குமளவு மரத்துப்போன சமூகமாக மாறிவிட்டோமா என்கிற கனத்த இதயங்களோடு கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தை நோக்கி பகிரங்கமாக மன்னிப்பு கேட்போம்! சக மனிதர்களை நேசிக்கிற குணத்தை இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்!!

No comments:

Post a Comment